Thursday, May 21, 2009

பிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவு வணக்கம்


Sunday, February 01, 2009

பிப்ரவரி 4 - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுங்கள்

பிப்ரவரி -4 பொது வேலை நிறுத்தம்!

இன்னலுறும் ஈழத்தமிழர்களுக்காக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பிப்ரவரி 4 பொது வேலை நிறுத்ததிற்கு உங்களின் தார்மீக ஆதரவு கொடுங்கள்.

அலுவலகம் நடக்கும் பட்சத்தில் அலுவலகத்தை ஒருநாள் புறக்கணியுங்கள். உங்கள் புறக்கணிப்பு மேலும் பலரை உத்வேகம் காணவைக்கும்.

காலவரையின்றி கல்லூரிகளை மூடி போராட்டத்தில் கலந்து கொள்ள விடுமுறை கொடுத்த அரசுக்கு நன்றி!

Tuesday, January 20, 2009

என்ன செய்ய?

வன்னி அவலத்தை தமிழகத் தலைவர்கள் படிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இவர்களுக்காக இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் அனுப்பி வைக்கவேண்டும் போலத் தெரிகிறது.

வன்னி மக்களை ஒரு சிறு அறைக்குள் அடைத்தது போல அடைத்து அனைத்து வழங்கள்களையும் நிறுத்தி சொல்லன்னா துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு சலாம் அடிக்கும் கூட்டத்தினரின் கண்களுக்கு இந்த செய்திகள் படுமா எனத் தெரியவில்லை.

தினமும் சிகப்பு பட்டையுடன் ராசபக்சேவின் படத்தை போடும் ஹிந்து பத்திரிக்கையின் தர்மம் எப்படிப்பட்டது எனச் சொல்லித் தெரிவதில்லை.

பிரபாகரனின் லக்சரி பங்கர் பிடிபட்டதை காட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் இன அழிப்பு பற்றி காண்பிப்பார்களா என ஏமாற்றத்துடன் பார்க்கும் ஏமாளித் தமிழினம் அடேய் தமிழா உனக்கென்று எந்த ஊடகமும் இல்லையடா என என்றைக்கு சிந்திக்கும்?

ஈழத்தமிழன் எவன் இறந்தாலும் அவன்/அவள் புலி என பரப்பும் செய்தித்தாள்களுக்கு சிறார்களும் கைக்குழந்தைகளும் கூட புலிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. சரி வாங்கிய கூலிக்கு கோசம் போட்டுத்தானே ஆகவேண்டும்.

ராசபக்சேவே மேல் என ஜெயா அம்மையார் ஈழத்தமிழன் யாரும் இறக்கவில்லை என அடித்த அடியை தமிழினம் மறக்கவே மறக்காது.

ராசிவ்காந்தி அவர்கள் இருந்தபோதும் இறந்தபின்னும் ஈழத்தமிழர்களின் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர குறைக்கவில்லை.

புலிகளை ஒடுக்குகிறோம் எனச் சொல்லி தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராசபக்சேவிற்கு காவடி தூக்கும் கூட்டத்தினரின் ஜால்ரா சத்தங்களை இனி அதிகமாக கேட்கமுடியும்.

பாலஸ்தீனத்தின் மேல் தாக்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வைக்க சிலவாரங்களில் முடியும் பொழுது அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துவது அவ்வளவு கடினமா என யோசித்துப் பார்க்கமுடியுமா அடிமைத் தமிழர்களால்?

வன்னி மக்களை கொன்று குவித்தபின் யாருக்காக அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்?

ஈழத்தமிழனுக்காக அழும் என்னைப் போன்ற எதுவும் செய்ய இயலாத கையாலாகத் தமிழர்கள் என்ன செய்ய?

எவ்வளவு கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பதில் கிடைக்காத என்னைப் போன்ற தமிழர்கள் என்ன செய்ய?

அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என மூச்சுக்கு முன்னூறு தரம் பேசும் இந்திய இலங்கை அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் பற்றி பேசாதாது ஏன் என யோசிக்கும் தாழ்ந்த தமிழினம் என்ன செய்ய?

Thursday, October 09, 2008

நாதியற்றது நம் தமிழினமா?



மேலே உள்ள இருபடங்களும் பிபிசி செய்தியில் வந்த புகைப்படங்கள். படத்தைப் பார்த்தும் தமிழர்களுக்கு உணர்வு வரவில்லை என்றால் பிறப்பு சந்தேகத்துக்குரியது, அர்த்தமற்றது.

தமிழினமே உமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிட்டதா? 30கிமீ தொலைவில் அங்கே கேயேந்தி ஆதரவு கேட்கும் குரல் கேட்கவில்லையா?

1983ல் கொடுத்த குரல்கள் எங்கே போய்விட்டது. ? இணைந்த கைகள் எங்கே?

அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கே இன்னலுரும் நம் இனத்திற்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவாயா?

அமைதி தவழவேண்டிய நம் குழந்தைகளின் முகத்திலே குண்டுகளின் சத்தம் கேட்கமுடியாமல் காதை அடைத்துக்கொண்டிருப்பது கண்டும் உன்மனம் கலங்கவில்லையா?

நம் இனம் அழிக்கப்படவேண்டிய இனமா? நாதியற்றது நம் தமிழினமா?
தமிழா இன உணர்வு கொள்ளடா!



Saturday, December 08, 2007

பெரியார் தளம்!

திராவிடர் கழகம் சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய பெரியார் தளம் பற்றி ஒரு நினைவூட்டலே இப்பதிவு.

பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல இக்காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் தளம். இத்தளத்தில் அய்யாவின் நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டு தளவிறக்கம் செய்யும் வகையில் இபெரியார் என்ற பகுதி உள்ளது. ஆசிரியர்.கி.வீரமணி அவர்களின் நூல்கள் மற்றும் திராவிட கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்களும் இப்பகுதியில் உள்ளது.

பெரியார் இணைய தொலைக்காட்சி மற்றும் பெரியார் இணைய வானொலி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் பவள விழா நிகழ்ச்சிகள் பெரியார் இணைய தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த புரட்சியை புலிகள் மாவீரர் நாள் உரையின் போது நேரிடையாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. டெக்னாலஜியில் புலிகள் இன்னும் முண்ணனியில் உள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். பெரியார் இணைய வானொலி டிசம்பர் மாதத்திலிருந்து முழு ஒலிபரப்பை ஆரம்பிக்கவிருக்கிறது. தற்போது நீங்கள் அய்யாவின் கருத்துக்களையும் பாடல்களையும் கேட்கும் வசதி உள்ளது.

சுயமரியாதை திருமண பதிவு செய்ய, மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் என அனைத்து பகுதிகளையும் இத்தளத்தில் காணலாம். தள முகவரி: www.periyar.org.in

வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் புகழ்!

Saturday, November 03, 2007

பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனுக்கு என் வீரவணக்கம்!



ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய முதல் மரணம் இது. அவரின் குழந்தைத் தனமான சிரிப்பும் கண்ணியமிக்க பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய இழப்பு.


தமிழீழத் தோழர்களே கலங்காதீர்கள்!.


பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களின் இழப்பு மாபெரும் இழப்பு தான் என்றாலும் போரில் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்று மனதை திடமாக்கிக்கொண்டு மீள்வோம்.


கடந்த 25 ஆண்டுகளில் இழந்த வீரர்கள் ஏராளம். அவர்கள் சிந்திய ரத்தம் மேன்மேலும் புலிகளை உத்வேகத்தில் களம் காணச்செய்யும்.


சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக பலநாடுகள் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றின் பிரதிபலிப்பாக தமிழீழம் விரைவில் மலர இருக்கிறது. மாவீரர் நாள் நோக்கி மலர இருக்கும் தமிழீழத்தை நோக்கி உறுதி கொண்ட இதயத்துடன் பயணிப்போம்.


சிறிய அளவு கண்டனத்தை கூட இதுவரை வெளியிடாத இந்திய அரசின் குடிமகனாக, இந்தியத்தமிழனாக இருப்பதில் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.

Wednesday, September 26, 2007

ராமன் குடிகாரன் என்பதற்கான ஆதாரம் வால்மிகி ராமாயணத்திலிருந்து!

கலைஞர் பேட்டியின் போது ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதைப்பற்றி சிறு விளக்கம்:

`தி லிட்டில் பிளவர் பதிப்பகத்தார் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - சுந்தர காண்டம் ஸ்ரீ உ.வே. சி.ஆர். சீனுவாச அய்யங்கார் பி.ஏ., அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. சுந்தர காண்டம் பக்கம் 146-இல் உள்ள வாசகங்கள் இதோ:

அனுமன் சீதையிடம் கூறுகிறான்: ``ராமன் மது மாம்ஸங்களை விட்டார். வானப் பிரஸ்தருக்குத் தகுந்த பழம், கிழங்கு முதலியவைகளை ஸாயங்காலத்தில் புஜிக்கிறார்.

இணையத்தில் வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை தள முகவரியுடன் உங்கள் பார்வைக்காக:

ராமன் மாமிச பட்சிணி என்பதற்கான ஆதாரம்.

na mA.nsa.n rAghavo bhu~Nkte na chApi madhusevate vanya.n suvihitaM nityaM bhaktamashnAti pa~nchamam 5-36-4141.

raaghavaH= Rama; na bhuNkte= is not eating; maamsam= meat; na sevate= not indulging in; madhuchaapi= even spirituous liquor; nityam= everyday; paN^chamam= in the evening; ashnaati= he is eating; bhaktam= food; vanyam= existing in the forest; suvihitam= well-arranged (for him).

"Rama is not eating meat, nor indulging even in spirituous liquor. Everyday, in the evening, he is eating the food existing in the forest, well arranged for him."

URL: http://www.valmikiramayan.net/sundara/sarga36/sundara_36_frame.htm

நன்றி: சேகுவேரா, கள பதிவாளர்.

Labels: , ,