Friday, April 13, 2007

வருவது தமிழ்ப் புத்தாண்டா?

பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம்கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண் ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன். இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது. பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான்.அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்கு வார்கள். ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு ளுயயீயீhளைஅ என்கிறது. ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை. அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது.

இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.

படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந் திருக்கும். இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன். நாராயணனுக்குப் பேரன். நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள். அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு. கிருஷ்ணனிடம் கேட்கிறான் - எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம். எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம். நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்! ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?

பிறக்கப் போவது - சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது? ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா? இவ்வளவு குழப்பமாகவா அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு?

தமிழ்ப் புத்தாண்டு

1921-ஆம் ஆண்டு தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழகப் புலவர்கள் கூடிப் பேசினர். தமிழர்களின் ஆண்டுக் கணக்கு எது என ஆய்ந்தனர். பிரபவ முதல் அட்சயவரை நம்மீது திணிக்கப்பட்ட தமிழ் ஆண்டுக்கணக்கை - அறுபது ஆண்டுகள் மட்டுமே உள்ள ஒரு கணக்கை தமிழ்ப் புலவர்கள் ஏற்க மறுத்துப் புறந்தள்ளினர்.

ஒருமனதாக முடிவு செய்தனர் - திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை வைத்துக் கொள்ள முடிவு செய்து அறிவித்தனர். ஆண்டுத் தொடர் எண் எப்படிக் குறிப்பது எனவும் விவாதித்து முடிவு செய்தனர். அதன்படி உலகம் முழுவதும் நடப்பிலுள்ள பொது ஆண்டு முறை எண்ணோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிடுவது என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி பொது ஆண்டு 2007-க்குத் திருவள்ளுவர் ஆண்டு 2038 ஆகிறது. அம்மாதிரியே தமிழ்நாடு அரசின் கணக்குமுறை கையாளப்பட்டு வருவதை அரசு நாள்காட்டியில் காணலாம்.

தமிழ்ப் புலவர் குழு ஆண்டுக்கணக்கை அறிவித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆண்டுப் பிறப்பு நாளையும் அறிவித்தது. அதன்படி திணிக்கப்பட்ட புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் (பெரும்பாலும் பொது ஆண்டுக் கணக்கின்படி ஏப்ரல் 14-ஆம் நாள்) என்பதனை ஏற்காது, தை முதல் நாளை (பெரும்பாலும் பொது ஆண்டுக் கணக்கின்படி ஜனவரி 14-ஆம் நாள்) புத்தாண்டுத் தொடக்க நாளாக ஏற்றிட வேண்டும் எனவும் அறிவித்தது.

இந்த வகை இரு அறிவிப்புகளில் முதல் அறிவிப்பை - திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை - தமிழ்நாடு அரசு ஏற்று, ஆணையிட்டுக் கைக்கொண்டு வருகிறது. ஆனால் இரண்டாம் அறிவிப்பை - புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை இன்னும் ஏற்கவில்லை. ஏற்று அதற்கான ஆணைகளை முத்தமிழறிஞர் - தமிழவேள் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள் பிறப்பிப்பார் என்கிற நம்பிக்கை எட்டுக் கோடித் தமிழர்களின் நெஞ்சத்திலும் உறுதியாக உள்ளது.

புரட்சிக் கவிஞர் பாடினார் - பத்தன்று, நூறன்று, பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்... என்று! அப்படிப் பல்லாயிரத்தாண்டுக் காலமாகப் புத்தாண்டாக இருந்த தை முதல் நாளை அதிகாரப்பூர்வமான அறிவிக்கப் பெறும் நன்னாளை எதிர்நோக்குவோம். பன்னாட்டுப் படையெடுப்பால் திணிக்கப்பட்ட ஆபாசப் புராணப் புளுகுகளைப் புறந்தள்ளுவோம்!