Monday, November 20, 2006

தமிழர்களே, உஷார்! உஷார்!!

பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் பார்ப்பனர்கள் இன்றுகூட குறை சொல்வதன் பொருள் என்ன?

இன்று வரையிலும் பார்ப்பனர்கள் தங்களின் பிறவி உயர் ஜாதித்தனம் என்கிற திமிரிலிருந்து விடுபடவில்லை என்பதற்கான அடையாளமே அது! பெரியாரும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமும் சொன்னது என்ன? பிறப்பின் அடிப்படையில் எந்த மனிதனும் உயர்ந்தவனும் அல்ல + தாழ்த்தவனும் அல்ல என்பதுதான்.

இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள்தானே? திருவாளர் `சோ’ ராமசாமியும், பார்ப்பன சங்கத்தாரும், சங்கர மடத்தாரும், காவி கட்சியாரும். ஆலிங்கனம் செய்து கொண்டு பெரியாரை கொச்சைப்படுத்த முயல்வதன் மூலம் மக்கள் மத்தியில் கொச்சைத்தனமாக வெறுக்கப்படுகிறார்கள். இவர்கள் என்னதான் குடலைக் கிழித்துக் கொண்டு `குறக்கலி’ வித்தை காட்டினாலும் மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் குற்றவாளிகளாகத் தான் திகழ்கிறார்கள். வஞ்சகர்களாகத்தான் பேசப்படுகிறார்கள், சூழ்ச்சிக்காரர்கள் என்றுதான் கணிக்கப்படுகிறார்கள்.

இடஒதுக்கீட்டின் காரணமாக 69 சதவீத மக்கள் பயன் பெறுகிறார்கள் என்றால், அதனை எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனர்கள் வெகு மக்களின் கண்டனங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது மட்டுமல்ல; இன்னும் ஜாதி ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் கொடியவர்கள் என்று அசிங்கப்படும் நிலைக்கு ஆளாகிறார்கள்.`ஃபைனான்சியல் எக்°பிர°’ என்னும் ஆங்கில ஏட்டில் (12.11.2006) திருவாளர் சோ ராமசாமி எழுதியுள்ள கட்டுரையில் இழையும் மையப்பகுதி 2006+ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் பாசி°டுகளே என்பதற்கான சாட்சியமாகும். தந்தை பெரியார்மீது பாய்கிறார். வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகக் கூடாது என்று சொன்னவர்; பார்ப்பனரல்லாத மேல்ஜாதிக் காரர்களுக்காகப் பார்ப்பனர்களை எதிர்த்தவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால்தான் திராவிடர் இயக்கத்தினை தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரிப்பதில்லை என்று சகட்டுமேனிக்கு வெறியைக் கக்கியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள், தகவல்களைக் கொஞ்சம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து போட்டால் இந்தப் பார்ப்பனர்கள் கொட்டிய பதர்கள் ஒரு நொடியில் பறந்து போய்விடும்.பிரிட்டீஷ் முதலிய எல்லாவித முதலாளித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை செய்வது என்று தீர்மானம் போட்டவர் தந்தை பெரியார். வெள்ளையர்களை எதிர்த்து காங்கிர°காரராக இருந்து குடும்ப உறுப்பினர்கள் சூழ போர்க்களங்கள் கண்டவரும் அவரே! அந்த வகையில் காந்தியாருக்கும் பெரியார் வழிகாட்டி!சுதந்திரப் போராட்ட வீரருக்கான விருது மத்திய அரசால் பெரியாருக்கு வழங்கப்பட்ட விவரம், கூடத் தெரியாத `அம்பியாக’ எழுத லாமா?

வெள்ளையனே வெளியேறு என்கிற இயக்கம் வெடித்தபோது ஜகா வாங்கி, காங்கிர°காரர்களாலேயே `ஆக°டுத் துரோகி’ என்று அழைக்கப்பட்ட ஆச்சாரியார்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்?பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு அரசு பணம் கொடுத்தற்காகக் கூக்குரல் போடும் இந்தக் கூட்டம் ஆக°டுத் துரோகிக்கு எப்படி கவர்னல் ஜெனரல் பதவி கொடுக்கலாம் என்று எழுதுகோல் பிடித்ததுண்டா?

தன் தியாகத்துக்காக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தையே ஆச்சாரியார் எழுதிக் கேட்டதுபோல, சுதந்திரப் போராட்டத்தில் தானும் தமது குடும்பத்தினரும் ஈடுபட்டுச் சிறை சென்றதற்காக தியாகி மானியமா கேட்டார் பெரியார்?

வெள்ளைக்காரன் ஆட்சி கட வுள் கொடுத்த அருள் என்றும், வெள் ளைக்காரன் ஆட்சி நீடிக்க கடவுள் அருள் புரிய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்கள் யார்? பார்ப்பனர்கள் தலைமை தாங்கிய காங்கிர° மாநாடுகளில்தானே இந்தக் கூத்துகள் எல்லாம் நடந்தன? இல்லை என்று மறுக்க முடியுமா?

முதல் வருடம் காங்கிர° மாநாட்டுக்குத் தலைமை வகித்த வக்கீல் பார்ப்பனர்கள் அடுத்த வருடம் உயர்நீதிமன்ற நீதிபதிகளான மர்மம் என்ன?காங்கிர° நிதியில் குருகுலம் நடத்தச் சொன்னால் அதிலும் பார்ப்பனர்கள் + சூத்திரர்கள் என்று பேதாபேதம் செய்த வ.வே.சு. அய்யர்கள்தான் அவாள் பார்வையில் சுத்தம் சுயம் பிரகாசமான 22 காரட் தேசப் பக்த திலகங்கள் + அப்படித்தானே?வெள்ளைக்காரனோடு நகமும் சதையுமாக இணைந்து ராமராஜ்யம் அமைப்போம் என்று சொன்னதைப் புரிந்து கொண்ட பெரியார் அதன் உண்மைப் பொருள் பார்ப்பன ராஜ்யம்தான் என்பதை மிகச் சரியாகவே கணித்து, அந்த ராமராஜ்யமான சுதந்திர ராஜ்யம் வேண்டாம் என்று ஒளிவு மறைவின்றி உரைத்ததில் என்ன குற்றம்?

காங்கிரசில் இருந்தபோது சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை `ஹிந்து’ ஏடு தன் நூற்றாண்டு விழா மலரில் வெளியிடவில்லையா!வெள்ளைக்காரன் ஆளும்போதே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும்; அப்படிக் காணாவிட்டால் இங்கே னுநஅடிஉசயஉல (ஜனநாயகம்) இருக்காது; மாறாக பார்ப்பன நாயகம் தான் இருக்கும் என்றாரே!சொல் சுத்தம், அறிவு சுத்தம், நாணய சுத்தம், தொண்டு சுத்தம் என்று எல்லா வகையிலும் ஒளிர்விட்ட + நெருப்பில் அழுக்குத் தங்காது என்கிற அறிவியல் சூத்திரமான தந்தை பெரியாரைப்பற்றி எழுதிட கைகள் நடுங்க வேண்டாமா?

நேர்மையான நெஞ்சங் கொண்டவர்களிடத்தில்தான் இதனை எதிர்பார்க்க முடியும்?தந்தை பெரியார் கணித்ததுதானே இப்பொழுது நடக்கிறது. சுதந்திரம் அடைந்த கையுடன், சென்னை மாகாணத்தில் அமலில் இருந்த வகுப்புவாரி உரிமையின் கழுத்தில்தானே கத்தி வைத்தார்கள்? `சுதந்திர’ இந்தியாவை இதுவரை ஆண்ட பிரதமர்கள் யார் யார்? 51 வருடம் ஒரு மாதம் 29 நாள்கள் இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் பார்ப்பனர்கள்தானே?

குடியரசான 56 ஆண்டுகளில் 51 ஆண்டுகள் ஆண்டவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா? இன்னும் தீண்டாமை ஒழிப்பு பஜனை பாடிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, ஜாதி ஒழிப்பை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்ற முடியவில்லையே!தந்தை பெரியார் கட்டளைப்படி கறுஞ்சட்டைத் தோழர்கள் பத்தாயிரம் பேர் அரசமைப்புச் சட்டத்தை எரித்து சாம்பலை பிரதமருக்கு அனுப்பி வைத்தும்கூட மனித சுதந்தரத்துக்கு எதிரான ஜாதி பாதுகாப்பாகத்தானே ஜமக்காளம் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.சுதந்திரம் இருக்கும் இடத்தில் ஜாதி இருக்கலாமா?

ஜாதி இருந்தால் அங்கு சுதந்திரம் இருக்குமா என்ற தந்தை பெரியாரின் வினாவுக்கு சுதந்திர இந்தியாவின் பதில் என்ன?ஆண்டுக்கு ஒருமுறை பூணூலைப் புதுப்பிக்கும் சோ ராமசாமிகள் சொல்லுவார்களா?

பூணூல் புதுப்பிப்பு என்பது ஜாதி ஒழிப்புக்கான ஆயுதம் தீட்டலா?பார்ப்பனர்களை எதிர்த்தது பார்ப்பனரல்லாத உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானாம்?

தாழ்த்தப்பட்டவர்களுக்கக்க ஒன்றும் செய்யவில்லையாம், இதுவும் ஒரு சிண்டு முடியும் வேலைதான்!தன்னுடைய இலட்சியத்திற்கு யார் கிடைத்தாலும் தந்தை பெரியார் அவர்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது உண்டே! பொப்பிலிகளும் பனகல்களும் தந்தை பெரியார் பார்த்த திசையில் ஆட்சியைச் செலுத்தியவர்களாயிற்றே!மருத்துவக் கல்லூரியில் சேர சம°கிருதம் படிக்க வேண்டும் என்று இருந்த தடையை பனகல் அரசரைக் கொண்டுதானே பெரியார் தகர்த்தெறிந்தார்.பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்த இந்துக் கோயில்களின் நிர்வாகச் சிண்டை இழுத்துப் பிடிக்கும் ஒரு சட்டத்தை ஒரு பனகல் அரசரைக் கொண்டுதானே தந்தை பெரியார் நிறைவேற்றச் செய்தார்?முத்தையா முதலியார் என்ற பார்ப்பனரல்லாத உயர் ஜாதிக்காரரைக் கொண்டு தானே வகுப்புவாரி உரிமை என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரச் செய்து சவுண்டிகளுக்குச் சம்மட்டி அடி கொடுக்கச் செய்தார்?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாடுபடவில்லையாம். வைக்கம் போராட்டம் என்ன உயர் ஜாதிக்காரர்கள். தெருவில் நடக்கும் சிவில் உரிமைக்காகவா?மாகத் என்னும் ஊரில் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடுப்பதற்கு தமக்கு உந்து சக்தியாக இருந்தது பெரியார் ராமசாமியின் வைக்கம் போராட்டம்தான் என்று அண்ணல் அம்பேத்கரே சொன்னதெல்லாம் `சோ’ கூட்டத்திற்குத் தெரியுமா?

ஆதி திராவிடர் (பஞ்சமர்) பொது வீதிகளில் நடந்து செல்லலாம் என்று ஆணை பிறப்பித்த ஆட்சி எது? நீதிக்கட்சி ஆட்சியல்லவா? (ழுடி 2660 டிக 25.9.1924)

பள்ளிகளில் ஆதி திராவிடர் மாணவர்களைச் சேர்க்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று சுற்றறிக்கை விட்டவர் தாலுகாபோர்டு தலைவரும், தந்தை பெரியாரின் சீரிய தொண்டருமான சிவகங்கை இராமச்சந்திரனார் என்ற உண்மை தெரியுமா?பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க மறுத்தால், அதன் உரிமம் ரத்துச் செய்யப்படும் என்று ஆணை பிறப்பித்தவர் ஜில்லா போர்டு தலைவரும் சுயமரியாதை இயக்கத்தின் தலைவருமான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் என்பது சங்கராச்சாரியாரின் சீடர்களுக்குத் தெரியுமா?

கொலைக்குற்றவாளியாகத் திரிந்தாலும் சங்கராச்சாரியார்களை ‘பெரியவாள்’ என்று அழைக்கும் + துதிக்கும் பேர் வழிகள் பெரியாரைக் கொச்சைப்படுத்த முனைகிறார்கள் தமிழர்களே, உஷார்! உஷார்!!

Thanks - Viduthalai

1 Comments:

Blogger மாசிலா said...

தேவையான சமயத்தில் பூத்த நல்ல பதிவு. நன்றிகள்.
சாதி, மத வெறி பிடித்துள்ள கூட்டங்கள் சமுதாயத்தில் மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் இவ்வேலைகளில் முன் எப்போதையும் விட விழிப்புணர்வு இப்போது அதிஅவசியம் தேவைப்படுகிறது. உள்நாட்டில் குழப்பங்களை உருவாக்கி, அமைதியையும் பாதுகாப்பையும் கேடாக்கி ஒரு உள்நாட்டு போரையே எழுப்பிவிட நிறைய விஷ சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அவலங்களால் வெளி நாடுகளிலிருந்தும் பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் அமைதியிழந்து, பாதுகாப்பின்றி பயத்தில் வாழ்கின்றனர்.
உலகத்தின் தலைசிறந்த பெருமைமிக்க உன்னத ஜனநாயக நாடான இந்தியக்குடியரசில் இதுபோன்ற விஷ சக்திகளை வளரவிடாமல் முளையிலே வேறுடன் அறுத்து ஒழித்திட அனைத்து முனைகளிலும் கவனமாக விழித்திருந்து கடைசி மூச்சுள்ளவரை எதிர்த்து போரிடவேண்டும். இப்பாரத பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் எந்தவித பாகுபாடின்றி சகல சம அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை வெறியர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
இப்பாரத பூமி ஒரு குழுவினருக்கோ அல்லது ஒரு மதத்தினருக்கோ சொந்தமில்லை. அப்படி கனவு காண்பவர்கள் அனைவரும் வடிகட்டின அடிமுட்டாள்களே.

November 20, 2006 2:26 pm  

Post a Comment

<< Home