Thursday, October 26, 2006

மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சி


புதிதாக வெளிவந்துள்ள இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாக உள்ளன. உதாரணமாக இதில் வரும் காம்பியர்கள் சேலை உடுத்துகின்றனர். தூய தமிழில் பேசுகின்றனர். (செய்திகள்). செயா தொலைக்காட்சியில் வருவது போல் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒரு தீம் பாடல்.

நக்கீரனில் வெளிவந்த தொடர்கள் இங்கு தொடர்களாக வெளியிடுகிறார்கள் (ஆட்டோ சங்கர் கதை, ஒரு நடிகையின் கதை). ஆட்டோ சங்கர் தொடரில் திருவாசக போலிஸின் முகம், ஏகேகே (இனிசியல் மாறியுள்ளது), பெரிய விவசாயி-அரசியல்வாதி, சில நடிகைகள் பற்றி புதிதாக அறியமுடிந்தது. நான் அத்தொடர் படிக்கவில்லை ஆதலால்.

மற்றும் பல நல்ல நிகழ்ச்சிகள் தமிழில். தமிழ் ஆர்வலர்களால் பரவாலாக நிச்சயமாக விரும்பப்படும் என நம்புகிறேன்.

கிருஷ்ணன் மாமாவா?

கிருஷ்ணன் மாமாவா?


(பகவான்) விஷ்ணு எடுத்த அவதாரங்கள் ஒன்றல்ல, இரண் டல்ல! பத்து. அவற்றில் இராமா வதாரம் “பூர்ண அவதாரம்” என்றும் கிருஷ்ணாவதாரம் “பரி பூர்ண அவதாரம்” என்றும் பரம பாகவதர்கள் சொல்லிச் சொல்லி பூரிப்பார்கள். ஏன் அப்படி என்கி றீர்களா?இராமனுக்கு ஒன்றோ, இரண்டோதான். ஆனால் கிருஷ் ணனுக்கோ ஆயிரக்கணக்கில், இது என்ன கணக்கு? புரியவில்லையே! இது “அந்த”க் கணக்கு தான். இராமா வதாரத்தை விட கிருஷ்ணாவதாரம் “சிரேஷ்டமானது” “உத்தமமானது” என்கின்றனர் பரம பாகவதர்கள்.கிருஷ்ணன் யாருக்கு மாமன்? பாண்ட வருக்கு. பாண்டவர் தாய் குந்தியும் கிருஷ்ணனின் தந்தை வசுதேவனும் உடன் பிறந்த வர்கள்.

துரியோதனனிடம் சூதாடி வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடிந்து நாடின்றி தவித்த பாண்டவருக்குப் பாதி காசைப் பெற்றுத் தர கிருஷ்ணன் துரியோதனனிடம் தூது செல்கிறான். தூது சென்ற “கோகுல” கிருஷ்ணன் அங்கு பல “கோல் மால்”களைச் செய்கிறான்.கர்ணனைக் கண்டு அவனைப் பாண்டவர் பக்கம் வருமாறு அழைக்கிறான்.தாய், தந்தை யாரென்று தெரியாது தேரோட்டியின் வளர்ப்பு மகனாக வளர்ந்து வரும் அவனுக்குத் தாய் குந்தியும், தந்தை சூரியனும் ஆவர் என்ற உண்மையைத் தெரிவிக்கிறான். மேலும் அவன் பாண்ட வர்க்கு மூத்த சகோதரனாக ஆகிறான்.

மேம் கிருஷ்ணன் கூறுகிறான், “கர்ணா! சநாதனமான வேத வாதங்களை நீயே அறிகி றாய். சா°திரங்களை அறிந்த ஜனங்கள் கன்னிகையிடம் பிறந்த காளீனனுக்கும், ஸஹோடனுக்கும் அந்தக் கன்னிகையை விவாகம் செய்தவனைப் பிதாவாகச் சொல்கிறார்கள். கர்ணா! நீ அப்படிப்பட்டவனாய் இருக்கிறாய்! (கர்ணன், குந்திக்கு விவாகத்திற்கு முன்னமா பிறந்தவன் - காளீனன்). அப்படிப் பிறந்த நீ சா°திரங்களுடைய நிச்சயத்தினாலே தர்மமாகப் பாண்டுவினுடைய புத்திர னாகிறாய்!தகப்பன் வழி பார்த்தர்கள், (கவுரவர்) தாயின் வழி விருஷ்ணிகள் (யாதவர்) உன்னைச் சேர்ந்தவர். அய்ந்து பாண்டவர், அவர்களின் அய்ந்து புத்திரர்கள், அபிமன்யு பிற அரசர்களும் உன் பாதங்களைப் பிடிப்பர், நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரன் போல் இந்த உலகை நீ ஆளுவாய்!கர்ணா! வந்துவிடு! பாண்டவர் பக்கம் வந்து விடு! வா! வா!! இந்த கூற்று வரையில் கிருஷ்ணன் சொன்னது சரியே!இறுதியாகப் “பகவான்” கிருஷ்ணன் கர்ணனுக்குச் சொல்லும் “உபதேசம்”“அப்படியே, திரவுபதியானவள் ஆறாவது காலத்தில் அடையப் போகிறாள்!”(அத்யா. 140 - உத்யோக பருவம்)இதற்கு அடிக்குறிப்பு: பாண்டவர் அய்வரிடத் திலும் ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு காலத்தில் இருக்கிறாள்.

கர்ணனிடம் இருந்தால் அது ஆறாவது காலமாகும்.கிருஷ்ணன் கர்ணனுக்குத் தர விரும்பும் “கவர்ச்சி”யான யைப் பார்த்தீர்களா? கிருஷ்ணன் கர்ணனுக்கும் தாய் மாமன் மகன் தான். மாமன் மகன் எப்படி “மாமா”வாகச் செயல்படுகிறான் பாருங்கள்! திரவுபதியைப் பொருத்தவரை “அய்வருக்கும் தேவி”யாய் இருந்து பெற்ற “பத்தினித் தன்மை” ஆறாவதாய் கர்ணனையும் “அனுமதித்தால்” கெட்டு விடவா போகிறது?ஆனால் கர்ணனை விட வயதில் பல ஆண்டு சிறியவன் கிருஷ்ணன்.

சிறிய வன் பெரியவனுக்கு இவ்வாறு ‘ஆசை’ காட்டுவது “மாமா” வேலைதானே!பல பெண்களோடு ‘லீலை’ செய்த கிருஷ்ணன் இப்படி இருப்பதில் வியப்பு ஏதும் உண்டோ?எனவேதான் இந்திய சமூகவியல் ஆய்வாளர் டி.டி.கோசாம்பி அவர்கள் “மகாபாரத கிருஷ்ணன் எவ்வித நற்பண் பையும் போதிக்கத் தகுதி பெற்றவ னல்லன்” எனத் திட்டவட்டமாக கிருஷ்ண னைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.(மாயையும் யதார்த்தமும், பக்கம் 33)

பின்குறிப்பு: “இந்து மதத் தலைவர் களையும், துறவிகளையும் கேவலப் படுத்திப் பேசினால் பேசுவன் வீட்டுக்குப் போய் சேருமுன் அவன் கைகள் வெட்டப் படும்”- ஒரு தர்ப்பைபுல் வீரன்“அது சரி! இப்படி “பகவானையே” கேலி செய்து எழுதினால்....? என்ன செய்வீர்? தர்ப்பைப்புல் வீரரே! பதில் சொல்லும்! “காலை வெட்டுவோம்!”நம் பரம்பரை அருவாவீரர்: டேய்! வெட்றதுக்கு அருவாவைத் தேடி எங்கிட்டே தானேடா வரணும், வாடா பார்க்கலாம்! தர்ப்பைப்புல் வீரன் ஓடுகிறான்...

Source - Unmaionline.com

Wednesday, October 25, 2006

“கோபியர் கொஞ்சும் ரமணா! கோபால கிருஷ்ணா!

“கோபியர் கொஞ்சும் ரமணா! கோபால கிருஷ்ணா!

வைணவ பக்த கோடிகள் இராமாவதாரத்தைப் “பூர்ண” அவதாரம் என்றும், கிருஷ்ணாவதாரத்தைப் “பரிபூர்ண” அவதாரமென்றும் சிறப்பித்து பேசுவர். அந்த ‘அவதாரம்’ செய்த லீலைகளை விரித்துரைப்பதுதான் பாகவதம். பகவான் கோவிந்தனின் ‘பரதாராபிமர்சனம்’ என்ற மிதமிஞ்சிய ஆபாசத்தைப் படம் பிடித்துக் காட்டுவதான் ‘ராசலீலை’ என்னும் பகுதி. (அபிமர்சனம் = தொடுதல், தொடர்பு) கிருஷ்ணனின் லீலைகளை அறியுமுன் இந்த உலகத்தில் அவர் ஏன் “மானிட ஜன்மத்தை” எடுத்தார் என்பதை அறிந்து கொள்வது அவர் செய்த லீலைகளுக்கு “வலு” சேர்க்கும் அல்லவா?

இதோ அவரே தம் கிருஷ்ணாவதார நோக்கத்தைத் தெளிவாகக் கூறுவதைக் கேளுங்கள்.“இந்தத் தர்ம ஸம்ஹிதையைப் (தொகுத்துச் சொல்லுவது) பற்றி என்ன சந்தேகம்? தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும், துஷ்டர்களை நாசம் செய்வதற்காகவும் நான் (கிருஷ்ணன்) எனக்கு இந்த மானிட ஜன்மத்தை என்னிடத்தில் மாயையினால் செய்து கொண்டேன்” - வைஷ்ணவதர்மம் - மகாபாரதம் - ஆஸ்வ மேதிக பர்வம். அத்யாயம் 96, பக்கம் 267. பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாய் “உபதேசிக்கும்” பகுதி பாகவதத்தில் பத்தாவது “°கந்தம்” (பகுதி). பாகவதத்தை யாக்கனத்தோடு அச்சிட்டு வெளியிட்ட கடலங்குடி நடேசசாஸ்திரிகள் கூட “கிளு கிளு”ப்பான இப்ப குதியைத்தான் முதலில் வெளியிட்டார்.

இதில் கிருஷ்ணன் பர°திரீகளான (பிறர் மனைவியர்) கோபிகைகளோடு அத்யாயம் 29இல் “ஜலக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 30இல் “வனக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 31இல் “ஸ்தலக் கிரீடை” செய்ததையும் மிக மிக அருவருப்பான மொழியில் சொல்லப்பட்டுள்ளது. (ஜலக்கிரீடை - நீரில் விளையாடுவது, வனக்கிரீடை - காட்டில் விளையாடுவது, ஸ்தலக் கிரீடை - நிலத்தில் விளையாடுவது) அத்தியாயங்கள் 32, 3359 ஆகியவற்றிலும் “சிருங்கார கதை” தொடர்கிறது. அந்த “லீலைகளில்” ஒன்றிரண்டை கூறக்கூடாதா? அவைகளைக் கேட்காவிட்டால் “பைவ் ஸ்டார் ஓட்டலில் பழையது சாப்பிட்டது போல்” ஆகிவிடும் என்று பக்தர்கள் புலம்புவது என் காதுக்கு எட்டாமலில்லை. இதோ ஒன்றிரண்டை நாகரிகமான மொழியில் சொல்லுகிறேன். கேளுங்கள்!

“கோபஸ்திரீகள் (கோபிகாஸ்திரீகள்) காமத்தை அதிகப்படுத்தும் கிருஷ்ணனின் கீதத்தைக் கேட்டு அவனிருக்கும் இடம் நாடி ஓடிவருகின்றனர். - பால் கறந்து கொண்டிருந்த சிலர் ஆசை கொண்டர்களாய் பால் கறப்பதை நிறுத்தி விட்டு ஓடிவந்தனர். - அன்னம் பரிமாரிக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், - குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், - கணவர்களுக்குப் பணிவிடை செய்பவர் அதை விடுத்தும், - உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், கணவர்கள் தடுத்தும், பிதா தடுத்தும், மாதா தடுத்தும் உடன்பிறந்தான் தடுத்தும் கட்டுக்கடங்காது, மோகத்தோடு கிருஷ்ணனை நோக்கி ஓடுகின்றனர்.

ஓடிவந்த ஒய்யாரிகளோடு கோபாலன் கண்டபடி, கண்ட இடங்களில் ஆடினான், பாடினான், இறுதியில் கூடினான்.யமுனை நதியிலும், அதையொட்டிய சோலைகளிலும், நதிக்கரை திட்டுகளிலும், மனம் “திகட்டும்” அளவுக்குக் கோபியரோடு கொஞ்சினான் கோகுல கிருஷ்ணன்.
இந்தப் பகுதியைப் பரம பாகவதர்கள் “ராசலீலை” என்று பக்தி பரவசத்தோடு பாராட்டுவர். ஆனால் கோவிந்தனும், கோபியரும் செய்த சேட்டைகளைப் படித்தால் நமக்கோ, உள்ளும் புறமும் குமட்டும். நமக்கு மட்டுமா? இந்தப் பக்தி ‘ரசம்’ சொட்டும் பாகவதத்தை மரணத்தின் பிடியில் இருந்த பரீட்சித்து (அபிமன்யு மகன்) அரசன் சுகர் (வியாசரின் மகன்) என்னும் முனிவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வரசனுக்கும் நம்மைப் போல் ஓர் அய்யம் ஏற்பட்டது. சுகமுனிவரை நோக்கி “தர்மம் காத்து அதர்மத்தை அழிக்க வந்த கோபாலன் என்னஎண்ணங்கொண்டு வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்தார். எல்லோருக்கும் வழிகாட்ட வேண்டிய பகவான் கோவிந்தர் “பரதாராபிமர்சனம்” (பர+தார+அபிமர்சனம் = பிறர் மனைவியைக் கூடுதல்) செய்வது தவறான காரியமல்லவா?” என்று “பச்சையாகக்” கேட்டான் பாராளும் பரீட்சித்.

“மகரிஷி”. க்கா தெரியாது மழுப்பி, குழப்பி, பதில் சொல்ல? கேட்ட வினாவிற்குத் தொடர்பு சிறிதும் இல்லாத அவருடைய “தத்துவ விளக்க”ப் பதில் இதோ! “மன்னா, எல்லாவற்றையும் அக்னி எரித்துவிடும். அக்னியைப் போன்ற ஒளி உடையவர்களும் அப்படியே. அவர்களை எந்த பாபமும் பற்றுவதில்லை. அவர் செய்தாரே என்பதைக் காட்டி தான் செய்ய எவரும் மனதாலும் நினைக்கக்கூடாது. அப்படிச் செய்பவன் அழிந்து போவான். சிவபெருமான் விஷத்தைச் சாப்பிட்டாரே என்று தானும் சாப்பிடுபவன் அழிந்து போவான்.” மேலும் தொடர்கிறார் சுகர், “ஈஸ்வரர்களின் உபதேசமே பின்பற்றக் கூடியதாகும், அவர்களுடைய நடத்தையைப் பிரமாணமாக (விதி (அ) ஆணை) எடுத்துக் கொள்ளக் கூடாது.”கேட்ட கேள்வி, “கோவிந்தன் செய்தது சரியா?” என்பது. சுகர் சொன்ன பதில், “அவர்களின் செயல்கள் “விதி” அல்ல. வாக்கே ஆணை.”“ஊருக்குத்தான் உபதேசம். அது எனக்கு இல்லை” என்று ஒரே வரியில் முனிவர் சொல்லியிருக்கலாமே!வியாசர் தம் “ஞான மகிமையால்” நாரதர் வேண்டுகோள்படி பகவானுடைய அளவற்ற “லீலைகளை” வெளிக்கொணர்ந்து உலகுக்கு அளித்த “பாகவதம்” என்பது இதுதான். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! “கோபியர் கொஞ்சும் ரமணா! கோபால கிருஷ்ணா! என்று பாடத்தோன்றுகிறதா?

- நன்றி: கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்- கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், உரைநடையில்ஸ்ரீமத் பாகவதம் - ஸ்ரீ ஆனந்த நாச்சி யாரம்மா - ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்

Article from Ausran Malar

Friday, October 06, 2006

ரஜினி - மூன்றெழுத்து மந்திரம்

ரஜினி - மூன்றெழுத்து மந்திரம்

உண்மையில் ரஜினி, தன்னை மனதிலும் தோலிலும் சுமந்த தமிழ்னாட்டு ரசிகர்களுக்கு ஏதாவது செய்தாரா? வாழ்வாதாரா உதவிகளை செய்தாரா? ரசிகர்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறார்கள். அரசியல் மட்டுமே போதுமா? அரசியலில் அவர், அவர் ரசிகர்கள் தாக்கு பிடிப்பார்களா? வேறு என்ன அவர் தன் ரசிகர்களுக்காக செய்யலாம்?

ரஜினி ரசிகர்களை பொருத்தவரை அவர் அரசியலில் இறங்கி அதன் மூலம் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்று நினைப்பது அவர்கள் விருப்பம். ஆனால் அவரால் ஒரு இரவில் வரமுடியுமா என்பது சந்தேகமே. புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து 10வருடமாவது உழைக்காமல் பல இடங்களை வெல்ல முடியும் என்பது சற்று யோசிக்க வேண்டிய விசயம். அவ்வளவு நாட்கள் அவர் ரசிகர்களால் பொருக்கமுடியுமா? அவர்களால் பணத்தேவைகளை ஏற்ற முடியுமா என்பது என்னைப் பொருத்தவரை சற்று கடினம். ரஜினிக்கு முதலில் அரசியலுக்கு வர விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. ஏன் என்றால் அவருக்கு அவரின் அமைதி, விருப்பட்ட இடங்களுக்கு சென்று வருதல் போன்றவை அரசியலில் கிடைக்காது. ஓயாத உழைப்பும், அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலும் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இந்த இரண்டுமே அவரிடம் சற்று குறைவு என்பது அவரின் கடந்த தேர்தலின் போதே தெரிந்தது. அவருக்கு விருப்பம் இல்லாத ஒன்றில் இறங்கி அடிபடுவதை விட வேறு ஏதாவது செய்யலாம்.

ஊடகங்களில் வரும் செய்திகளின் படி அவர் தான் பிறந்த கர்னாடகாவில் முதலீடு செய்துள்ளதாகவே தெரிகிறது. தமிழ்னாட்டில் சம்பாரித்து அதை இங்குள்ள மக்களின் வளர்ச்சிக்கும், அவர் ரசிகர்களின் உயர்வுக்கும் ஏற்க தக்க வகையில் முதலீடு செய்திருந்தால் அவரை வாயர வாழ்த்தலாம். முதலீடு என்பது அவரின் பணத்தை பெருக்கவே தவிர செலவழிக்க சொல்லவில்லை. உதாரணமாக அவர் ரசிகர்கள் தமிழ்கத்தில் மூலை முடுக்கெல்லாம் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி கூரியர் சர்வீசோ அல்லது பார்சல் சர்வீசோ அல்லது கால் டேக்ஸி சர்வீசோ நடத்தலாம். அதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு ஒரு வியாபரமும், பணம் சம்பாரிக்க வழியும் ஏற்படுத்தியது போல் இருக்கும். அவர் என்றும் அவர்களின் மனங்களில் வீற்றிருப்பர். இதுபோல் ஏதாவது ஒன்று அவர் ஏற்கனவே செய்திருந்தால் அவரை நிச்சயமாக பாரட்டலாம்.

Thursday, October 05, 2006

How toilets were introduced on Indian trains

How toilets were introduced on Indian trains

Did you know?

Toilets were introduced on Indian trains only after a passenger, Okhit Chandra Sen, wrote a letter to the Divisional Traffic Superintendent, Sahabgunj Divisional Office in 1909, complaining about how he missed the train when he got down to attend the call of nature. The Times of India reproduced the unedited letter:

Beloved Sir,I am arrive by passenger train at Ahmedpore Station and my belly is too much swelling with jackfruit. I am therefore sent to privy. Just as I am doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with lota in one hand and dhoti in the next when I fall over and expose all my shockings to many female women on the platform. I got leaved on Ahmedpore Station. This is too much bad in passengers go to make dung that dam guard not wait train five minutes for him. I am therefore pray otherwise I am making big report to papers. Pray your honour to make big fine on that dam guard for public sake otherwise I am making big report to papers.

Yours faithfully,(Sd/- Okhit Chandra Sen)

செயாவின் பெரிய புத்தி

செயாவின் பெரிய புத்தி

அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல முக ஆட்சிக்கு வந்தாலே இந்த ஆயாவும், சோ போன்ற அடிவருடிகளும் புலம்ப ஆரம்பிச்சிடுராங்க..

1. விடுதலை புலிகள் ஊடுருவல்
2. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
3. பணப்புழக்கம் இல்லை
4. குடும்ப அரசியல், கிச்சன் பாலிடிக்ஸ்

இவாளுக்கு வேறு எதுவும் தெரியாதா? இது தான் செயாவின் பெரிய புத்தியோ?

காந்தி பிறந்த நாள்:

காந்தி பிறந்த நாள்:

காந்தி பிறந்த நாள் கொண்டாடப்போகும் இந்திய மக்களில் அவரை கொன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் கொண்டாட உரிமை உண்டா? உயர்சாதி பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள். சமாதான புருஷர்கள் என்றா? ஒருவேளை அவர்கள் காந்தி கொல்லப்பட்ட நாளைத்தான் கொண்டாடுவார்களோ?

குடும்ப அரசியல்:

குடும்ப அரசியல்:

காங்கிரஸ் : நேரு - இந்திரா - சஞ்ஜெய் காந்தி - ராஜிவ் காந்தி - மேனகா காந்தி - சோனியா காந்தி - ராகுல்

அதிமுக : எம்.ஜி.ஆர் - ஜானகி - ஜெயா - இவருடைய வளர்ப்பு மகன் (ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை )

தே.மு.தி.க : விசயகாந்த் - மச்சான் - விசயகாந்தின் மனைவி

மதிமுக : வைகோ - அவர் மகன் கடந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில் பேசியதாக செய்தி வந்தது

பா.ம.க : ராமதாஸ் - அன்புமணி

திமுக : மு.க - ஸ்டாலின் - அழகிரி (ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை - தொண்டர் போல் வேலை செய்கிறார்)

எனக்கு தெரிந்த ஒரு லிஸ்ட் போட்டுள்ளேன். இதில் எல்லா கட்சிகளும் முகவை குறை கூறுவது குடும்ப அரசியல். சரி மற்ற கட்சிகளில் இருப்பது என்ன அரசியல்? விசயகாந்த் ரொம்ப சவுண்டு குடுத்தாரு.. இப்ப என்ன சொல்லப்போறாரு. எல்லா அரசியல்வாதியும் தன் குடும்பத்தில் யாராவது ஒருவர் தனக்கு பின்னால் வரவேண்டும் என்று நினைப்பர். அதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. மற்ற எல்லாத் துறைகளிலும் தனக்கு பின் தன் வாரிசு வறவேண்டும் என்று நினைக்கும் போது இதில் முக என்ன குற்றம் புரிந்தார். ஸ்டாலினின் வளர்ச்சி விகிதத்தை மற்ற வாரிசுகளுடன் ஒப்பிட்டு குடும்ப அரசியல் பற்றி பேசுவது சாலச்சிறந்தது. சாதாரண வேலைக்கே சிபாரிசு தேவைப்படும் இக்காலத்தில் அரசியலில் ஈடுபட்டு ஒரு பதவிக்காக சிபாரிசு பெறுவது யாரிடம் பெற்றால் என்ன? இதிலும் முகவின் தலையை உருட்டுவார்கள்.

இலவசம் - சைக்கிள் கொடுத்தால் மவராசி செயா கொடுத்தா என்பார்கள். அதே டிவி கொடுத்தால் அவன் பணத்தையா கொடுக்கிறான், அரசாங்க பணத்தில் கொடுக்கிறான். டிவி கொடுத்தா போதுமா? மின்சாரம், கேபிள் யார் கொடுப்பா? ரிப்பேர் ஆன என்ன பன்றது? ஏம்பா சைக்கிள் ரிப்பேர் ஆகாத. சைக்கிள் கதி என்ன என்று பேப்பரில் போட்டார்கள். சைக்கிளுக்கு என்ன செலவோ அது தான் டிவி வாங்க ஆகுது. இலவச திருமணம் நடத்துதே அங்கே போய் கேட்க வேண்டியது தானே - கல்யாணம் பண்ணி வச்சிங்க? யார் பணம் கொடுப்பா குடும்பம் நடத்த? பிள்ளை யார் கொடுப்பாங்கன்னு?

இலவசமா மாடு கொடுக்கவேண்டியது தானே? அப்படின்னு ஒருத்தர் கேள்விகேட்டாரு. டிவிய உருவாக்கலாம். மாட்ட உருவாக்க முடியுமா? அதுவா வந்தாத்தான் (குட்டி போட்டாத்தான்) ஆச்சி.. இலவச நிலமும் அப்படித்தான். செயா அமைச்சர் அறிவித்த போது எங்க போச்சி புத்தி... இருக்கறது கொடுக்கிறாங்க... கிடைச்சவங்க பொழைக்க வேண்டியது தான்.

முக பண்ற வேலையில குற்றம் கண்டு பிடிக்கறத விட்டுட்டு வேற என்ன பண்ணா ஆட்சிக்கு வராலம்னு பாருங்க...