Wednesday, December 13, 2006

எத்தனை காலம்தான் சுரண்டுவார்?

பார்ப்பனர் இந்த நாட்டில் நுழைந்தது முதல் அவர்கள் உளறி வைத்த (அ) கிறுக்கி வைத்த வேதங் கள், உபநிஷத்துகள் மற்றும் புராண இதிகாசங்கள் அத்தனையும் உழைக்கும் வகுப்பாராகிய திராவிடர் களைச் (தமிழர்களை) சுரண்டி உடல் நோகாமல் வாழ்வதற்கே!

அவைகளில் பெரிய தத்துவங்களைப் போல் பிறப்பு, ஆத்மா - அவற்றை நிலை நிறுத்த ‘கர்மா’ அதனால் விளையும் பாப - புண்ணியங்கள், மோட் சம் - நரகம் ஆகியனவற்றிலிருந்து விடுபட ‘தர்மம்’ என்ற ஒரு வழியைக் கண்டு பிடித்து இன்றும் நம்மைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றனர். படித்த சில பாமர ஆன்மீகத் தமிழர்களும், இதற்குத் துணையாயிருந்து “ஆழ்வார்” வாங்கிக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை!

வாழ்நாள் முழுதும் இந்தச் சுரண்டலை எதிர்த்துப் போராடியவரே நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்.பார்ப்பனச் சுரண்டலுக்கு ஓர் எடுத்துக் காட்டு. இந்த பார்ப்பன சுரண்டலை “தர்மமாக” பார்ப்பனர் அல்லாத ‘விருஷ்ணி’ குலத்து வந்த கிருஷ்ணன் பெயரில் “வைஷ்ணவ தர்மம்” என மகாபாரதத்தில் கூறப்படுகிறது.‘யமலோகம்’ என்னும் ஒரு கற்பனை உலகத்தைப் படைத்து, அங்கு சுகமாக செல்ல வழி சொல்லப்படுகிறது.

“தேவர்களையும், பிராம்மணர்களையும் பூஜிப்ப வர்களுமாக இருக்கிறார்களோ, அவர்கள் இந்த மனுஷ்யலோகத்திலிருந்து மனைவிகளுடனும், பந்துக்களுடனும் சுகமாக (யமபுரம்) செல்லுகின் றனர்” (பக்கம் 292 அத். 100 ஆ°வ மேதிக பர்வம், ஸ்ரீமகாபாரதம்)“எவர்கள் வேதாத்தியனம் செய்த பிராமணர்களுக் குப் “பலவிதமான தானங்களை”க் கொடுக்கிறார் களோ அவர்கள் அதன் பயனாகச் சுகமாக (பிரேதபுரம் - யமலோகம்) செல்லுகின்றனர்” (பக்கம் 292).

பார்ப்பானுக்குத் தர வேண்டிய பலவிதமான தானங்கள் யாவை? பக்கம் 292, 293, 294, 295ஆம் பக்கங்களில் ஒரு நீண்ட பட்டியலே தரப்படுகிறது.அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கின்றீர்களா? இதோ அந்த பட்டியல்:

அன்னம் பால் கட்டை - பாதுகைபசு நெய் தோட்டம்செருப்பு தயிர் குதிரைவண்டிகுடை வெல்லம் மாட்டுவண்டுபடுக்கை தேன் யானைகட்டின தேர்இருக்கை கனிகள் பொன்நுணி வாசனை மலர்கள் ஆபரணங்கள் எள் வெள்ளிபானம் எண்ணெய் பவழம்பட்சணங்கள்நீர்நிலைகள் முத்துநெய் சேர்ந்த அன்னம் தண்ணீர் பூமிகன்னிகைமற்றும்தீபம், வீடு, மண்டபம், தீர்த்த பாத்திரம், குடம், கமண்டலம், தலைக்கு எண்ணெய், குடிக்க நீர், கால் கழுவ நீர்.

வாசகர்களே! எழுதிய வேகத்தில் சில விடுபட்டுப் போயிருக்கலாம்.“மானிட லோகத்திற்கும், யமலோகத்திற்கும் தூரம் என்ன?” யாரோ கேட்பது காதில் விழுகிறது.அதற்கும் (288ஆம் பக்கம், ஆ°வேதிக பர்வம், மகாபாரதம்) பதில் உண்டே! எண்பத்தா றாயிரம் போஜனை தூரம்! அதாவது ஆறு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் மைல்கள்! (6,88,000)அந்த தூரத்தைக் கடப்பது எப்படி?

இவ்வளவு “அளந்தவர்கள்” அதைத் தானா கிறுக்காமல் விடுவார்கள்?மேற்கண்ட தானங்களைப் பார்ப்ப னர்களுக்கு வாரி வாரிக் கொடுத்தால் யமலுகத்திற்கு நம்மை ஏற்றிச் செல் லும் வண்டிகள் இதோ தயார்! காளைகள் பூட்டப்பட்ட விமானங் கள்! நம்மை வரவேற்க அங்கே அணிய மாய் உள்ள அழகிகள் (அப்ஸரஸிகள்!)யானை, குதிரை, சக்ரவாகம், ஆகியவை பூட்டப்பட்ட பொன் மயமான விமானங்களில், இசை வாணர் இசைபாட, பொன் போன்ற நிறமுள்ள அழகிகளால் வணங்கப்பட்டு, தேவகன்னி கைகளால் சூழப்பட்டு யமலோகம் செல்கின்றனர்.சாரசப் பறவைகள், அன்னங்கள், மயில்கள், புலிகள் பூட்டப்பட்ட வண்டிகளில் யமபுரம் செல்லலாம். சிலர் கேட்கலாம். “பார்ப்பான் உளறலுக்கு ஓர் எல்லையில்லையா? இவற்றை எல்லாம் எப்படி நம்புவது?

இவற்றைப் படிக்கும்போது மைடியர் பூதம், வேப்பிலைக்காரி, ராஜராஜே°வரி போன்ற “சீரியல்”களைப் பார்ப்பது போல் உள்ளதே!” என்று நம்மில் பலர் எண்ணி நகையாடலாம்.நம்பினால் நடராஜா! நம்பாவிட்டால் எமராஜா!மேற்கண்ட ‘சீரியல்’களைப் பார்ப்பதற்கு எத்தனை ‘பாமரத் தமிழர்’ உள்ளனரோ அதற்குக் குறையாத எண்ணிக்கையில் “தர்மம் என்றால் பார்ப்பானுக்குக் கொடுப்பதுதான்,” என்று நம்புகின்ற ஆன்மீகத் தமிழர்கள் உள்ளனரே!“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!“வள்ளுவர் சொன்னது வாழ்க்கைக்கு உதவாது” என்பது அவர்களின் முடிவு.அதனால்தான் பார்ப்பானும், பார்ப்பான் பிடியில் உள்ள “நம்மவர்” ஊடகங்களும் நம்மை அடியோடு ஓடி, ஓடி சுரண்டுகின்றன.

3 Comments:

Blogger மாசிலா said...

நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் சுரண்டப்பட்டு, உறிஞ்சப்பட்டு, ஏமாற்றப்பட்டு கடைசியில் எதற்கும் உபயோகமில்லா வெறும் சக்கைகளாக சமுதாயத்தைவிட்டு தூக்கி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மனம் வேதனையில் துடிக்கிறது.

நல்ல பதிவு.
தொடர்க.
நன்றி.
அன்புடன் மாசிலா.

December 14, 2006 2:56 am  
Blogger Balan said...

பகுத்தறிவு உடையவர் அறிவாளி என்றுதான் கேள்விப்பட்டேன்.
இங்கு எல்லாம் மாறிப்போச்சு
ஒரு காப்பிக்கொ அல்லது பிஸ்கோத்துக்கோ ஆசைப்பட்டு பின்னூட்டல் வேறு.

April 27, 2010 10:15 am  
Blogger Balan said...

//நல்ல பதிவு.
தொடர்க.
நன்றி.
அன்புடன் மாசிலா.//

பகுத்தறிவு உடையவர் அறிவாளி என்றுதான் கேள்விப்பட்டேன்.
இங்கு எல்லாம் மாறிப்போச்சு
ஒரு காப்பிக்கொ அல்லது பிஸ்கோத்துக்கோ ஆசைப்பட்டு பின்னூட்டல் வேறு.

April 27, 2010 10:15 am  

Post a Comment

<< Home