Thursday, December 14, 2006

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனிக்கட்டுத் தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிர் நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக் கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போராமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்த சோம்பேறிகளின் காலிலும் விழுந்த மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, சொம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப் பூவையும் அந்த சொம்புக்கு சுத்திக்கொண்டு, `வெங்கிடாசலபதி கோவிந்தா’’ என்றும், ``நாராயணா கோவிந்தா’’ என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, தலை மயிரும் தாடி மயிரும் வளர்ந்து வெரும் மஞ்சள் நனைத்த துணிகட்டிக் கொள்வதும், மேளம் வைத்துக் கொள்வதும், பெண்டு பிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின்மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும்படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்ற கணக்கு வைத்த சேர்த்து எடுத்துக் கொள்வதும், ஆன பண மூட்டை கை கட்டிக் கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளி கம்பியை குத்துக் கொண்டு போதாக்குறைக்கு தெருவில் கூட்டமாய் கோவிந்தா + கோவிந்தா + கோவிந்தா என்று கூப்பாடு போட்டு வீட்டு வீட்டுக்கு கடை கடைக்கு காசு பணம் வாங்கி ஒரு பகுதியை ரயிலுக்கு கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும், ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும் அந்த மலை சொனைத் தண்ணீரில் குளிப்பதும். அந்த பட்டைநாமம் போட்டுக் கொள்வதும், கொண்டு போன பணத்தை கடாரத்தில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும், பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும், பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும், மேகவியாதிகாரருக்கும் வேக வைத்ததோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டையிலும், வேர்களிலும் செய்த மாமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், மலைக் காய்ச்சலோடு மலையை விட்டு இறங்கி வருவதும், வீட்டுக்கு வந்து மகே°வரபூசை `பிராமண சமார்த்தனை’’ செய்வதும், தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப் போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.திருப்பதிக்கு போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாரவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீன மான காரியத்திற்காக நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.

0 Comments:

Post a Comment

<< Home