Monday, January 29, 2007

இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை:

புரபசர் இந்திரா எம்.ஏ., (சா°திரி காவ்ய திரு. வித்யாலங்கார் எம்.ஓ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் உள்ளவற்றிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டதாகும். அதாவது அவர்கள் பெண்களைப்பற்றி இந்து மத ஆதாரங்கள், வேத சா°திரங்கள், புராண இதிகாசஙகள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுபவைகளைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:

எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும் நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.

நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்று வாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால், எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள். (மகாபாரதம்)

இதிகாசங்கள் காலத்தில் இருந்து சாதுவாகிய மன்னன் யதிஷ்டனும் பெண் களின் இயல்பை மிகக் கேவலமாக வெறுக்கத் தகுந்த முறையில் கண்டித்திருக்கிறான். (புத்தக ஆசிரியர்)

அதாவது: பெண்ணின் அறிவு, கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது. (மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39-+8)

பெண்களின் அறிவைப் பார்த்துத்தான் பிரக°பதியும் இதர பெரும் அறிவாளிகளும் அறிவுக்கான கொள்கைகளை வகுத்திருக் கிறார்கள் என்று தெரிகிறது. (மேற்படி 39-+40)

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்புப் போன்றவள். பெண் மாய்க்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள் + விரும்ப மாட்டார்கள். (மேற்படி 432+23)

உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். (மேற்படி 43+24)ஒருவன் கூடி வாழ ஒத்துக் கொண்டாலும், பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள். (மேற்படி 43+24)

அவர்கள் ஓர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடைய மாட்டார்கள். (மேற்படி 43+24)

ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பெறாமைப் படக் கூடிய (நல்ல தன்மை) ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந் தத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண் டால், அவன் நிச்சயமாக அழிந்து போவான். (மேற்படி 43+24)

எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனத்திலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களைச் சிருஷ்டி செய்தார்.ஆகவே, பெண்கள் மனித சமுதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற +- °திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையி-னாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும் இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள். (மனு 9.15)

உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர்போலச் சலனப்புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள். (இராமாயணம் ஆரண்ய காண்டம் + 13+5+6)

பெண்களின் முகங்கள் பூக்களைப் போன்றவைகள்; அவர்கள் மொழிகள் தேன் போன்றவைகள்; அவர்களது உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக்கூடியது; அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. (இராமயணத்திற்குப் பிந்திய காவியங்களில்)

ஒரு பெண்ணால் உண்மையாக நேசிப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.ஒரு பெண் தன் நோக்கத்தை பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள்.பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப்பட்டிருக் கிறார்கள். கொடுமைப்படுத்தப்பட்டிருக்க஼br />?றார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள். (பாகவத °கந்தம் 4+14, 42.8+4+36)

பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 குணங்களும் உரிமையானவைகள், பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம். (சுக்ரா 3+163)

பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டின்மீது அடிகள் கொடுக்கலாம். (அர்த்த சா°திரம் 3+3+50)

ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளாப்பினாலோ அடிக்கலாம்.சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் + அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களைக் கொன்றுவிடலாம்.உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார்.உலகம் தூங்கக் கூடாது என்று விரும்பியதற்காகக் காவ்ய மாதா என்ற பெண் விஷ்ணு கையினால் கொல்லப்பட்டாள்.``ஆ°ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளை தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.’’ (இராமாயணம் 25+17)

குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்-குரியதன்று. வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது’’``அதர்வண வேதத்தில் ஆண் மகவை விரும்புகிற-தேயல்லாது பெண் மகவை விரும்புகிறதில்லை.பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும்’’ (அதர்வண வேதம் 6+2+3)

``புங்கா கடவுளை வணங்குவதன் மூலம் ஆண்மகவே பிறக்கட்டும். பெண் மகவு பிறக்க வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.(மேற்படி 8+6+25)

`பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்’’ (காதபாசன் ஹிதா (27+ஏ)``ஆனால் இது பழக்கத்தில் மகளைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் தொடர்பற்றதாக இறந்தவர்களாகக் கருதப்படுகிறது’’

``யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ, அல்லது விவாக சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப் பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சமான்களைப் போலவே நடத்தவேண்டும்.’’(ரிக் வேதத்தைக் குறித்து எழுதிய பிரபல ஆசிரியரான டாக்டர் அபினாஷ் சந்திரதா° கூறுகிறார்).

``இதை இதிகாச காலத்திலும் காணலாம். அதாவது பஞ்ச பாண்டவர்களின் மனைவியாகிய துரவுபதியை யுதிஷ்டிரான் சகுனியுடன் சூதாடும்போது பணயமாக வைத்தான்’’ (மேற்படி)

``யாரும் கேட்காமலே, தனது மனைவியையும், தான் மதிக்கும் எல்லாவற்றையும், இராஜ்ய உரிமை-யையும் தாமாகவே பரதனுக்கு அதுவும் சந்தோஷமாகக் கொடுப்பதாக இராமன் வாயால் சொல்லுவதாக வால்மீகி எழுதியிருக்கிறார். (இராமாயணம் ஆசிரியர்)அந்நாளில் மனைவியைச் சாமானைவிட மேலாக மதிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணங்கள் வேண்டும்? (புத்தக ஆசிரியர்)

``ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்-பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியாளாகவுமிருப்பதனால்.’’ (ரிக்வேதம் 10.3124)

``சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவியின்மீது போடுகிறார்கள் என்று அந்தச் சூதாடி பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.’’ (ரிக்வேதம் 10+31+24)

``அந்த நாளில் (பண்டைய நாளில்) மனைவியின் நிலைமை அடிமையின் நிலைமையைவிட நல்ல நிலைமையே என்று சொல்லுவதற்கில்லை’’ (மேற்படி)

``பெண்ணின் நேசம் ஒரு பொழுதும் நிலையான-தன்று. அவளுடைய மனம் கழுதை போன்றது’’ இது மதத்தில் ஆரிய மதத்தில் அவர்களது வேத சா°திர புராண இதிகாசங்களில் காணப்படுபவை-களிலிருந்து பொறுக்கியெடுத்த சில குறிப்புகளாகும் இவை. இனியும் இதுபோலவும், இன்னும் மோசமாகவும் எவ்வளவோ குறிப்புகள் வேறு பல ஆதாரங்களில் இருக்கின்றன. பொதுவாக எல்லா மதங்களும் பெண்களைச் சிறிதாவது தாழ்மையாகத்தான் மதிக்கின்றன. வடநாட்டில் பெண்கள் எல்லா மதத்தாராலும் பெரிதும் மறை பொருளாகவே கருதப்படுகிறார்கள்.

நன்றி - விடுதலை

6 Comments:

Blogger மாசிலா said...

நல்ல பதிவு.

ஏந்தான் இவ்வளவு கீழ்தரமான புத்தியோ பெண்கள் மீது? இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? புரியவே இல்லையே!

பகிர்ந்தமைக்கு நன்மைக்கு நன்றி.

January 29, 2007 12:11 pm  
Blogger கருப்பு said...

ஆறிய மதம்தான் பெருசு என்று பேசும் பீலா, கடாயு, நீலகுண்டன், கால்மேரி, வக்ரா, நம்ம எலித்தம்பி, மேயவன் போன்றவர்கள் இந்த பதிவை படித்தார்களா?

என்னதான் கேட்டாலும் தக்க பதில் அங்கிருந்து வரவே வராது!

January 29, 2007 12:55 pm  
Blogger கருப்பு said...

ஆறிய மதம்தான் பெருசு என்று பேசும் பீலா, கடாயு, நீலகுண்டன், கால்மேரி, வக்ரா, நம்ம எலித்தம்பி, மேயவன் போன்றவர்கள் இந்த பதிவை படித்தார்களா?

என்னதான் கேட்டாலும் தக்க பதில் அங்கிருந்து வரவே வராது!

January 29, 2007 12:55 pm  
Blogger thiru said...

நல்ல பதிவு பகுத்தறிவு!

January 29, 2007 7:29 pm  
Anonymous Anonymous said...

:((((((((((

February 04, 2007 3:08 am  
Blogger sundar said...

I have a feeling that these may be the usual tricks of EVR/Veeramani and co to spread canards as no one may read the originals or have access to such books or it may be a contextual misrepresentation

November 21, 2010 5:05 pm  

Post a Comment

<< Home